15837. வாரும் ஆசீர்வாத ஜீவ ஊற்றே

1 ஆசீர்வாத ஜீவ ஊற்றே,
எந்தன் நெஞ்சம் பூரிக்க,
வாரும் தாரும் என்றும் கேளும்
எந்தன் மகிழ் கீதமே,
உம் ஆனந்த பாடல் கற்பியும்,
விண்ணின் தூதர் போலவே,
கன்மலைமேல் கண்ணை வைத்தேன்
மீட்பின் மெய் மா அன்பிதே.

2 எந்தன் உள்ளம் துக்கித்தாலும்
மாம்சம் பாவம் நீக்கியே,
நீரே தாரும் பாக்ய ஆசீர்
இன்றே நான் துவங்கினேன்,
தேவனே நீர் எபிநேசர்,
உம்மால்தானே இங்குள்ளேன்,
நம்பி நானும் உமதன்பால்
வீடடைவேன் முடிவில்.

3 இயேசுவே நீர் என்னை கண்டீர்
திக்கற்றோனாய் திரிந்தேன்,
நீரே என்னை தீங்கு நாளில்
இரத்தம் சிந்தி மீட்டீரே,
உம் தயவு என்றும் என்னை,
இரட்சித்தென்னை காத்ததே,
மாளும் மானிடன் நான் என்ன
சொல்ல கூடும் என்நாவால்.

4 உம் கிருபையின் கடன் என் மேல்
சேர்ந்தே அனுதினம், நல் ஆண்டவா
கட்டி வையும் சிதரும் என் நெஞ்சத்தை,
விட்டோடுமே, எந்தன் ஆன்மா,
உம்மையே என் நேசரே,
இதோ தந்தேன் எந்தன் உள்ளம்,
பூட்டி வையும் உம்மிடம்.

5 பாவம் செய்ய இயலா நாள்
உம்முகம் நான் காண்பேனே,
இரத்தத்தாலே தோய்த்த அங்கி
அணிந்தும்மை பாடுவேன்,
வாருமே என் ஆண்டவரே,
தந்தேன் எந்தன் ஆன்மமே,
உந்தன் தூதர் அனுப்பிடும்
நித்ய எல்லை சேர்க்கவே.

Text Information
First Line: ஆசீர்வாத ஜீவ ஊற்றே
Title: வாரும் ஆசீர்வாத ஜீவ ஊற்றே
English Title: Come, thou fount of every blessing
Author: Robert Robinson
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [ஆசீர்வாத ஜீவ ஊற்றே]
Key: E♭ Major
Source: Repository of Sacred Music, Part II, 1813
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us